Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி 

ஏப்ரல் 08, 2023 01:02

குமாரபாளையம், குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக்கலைான கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் 6, 7, 8ம் வகுப்பு மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி கற்றுக்கொடுக்கப்பட்டது.  

சென்னை நேதாஜி நவபாரத் பவுண்டேஷன் தலைவர்  மகேஷ் பங்கேற்று, மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி சான்றிதழும், சீருடையும் வழங்கினார்.

 விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஓபிளிராஜ், பள்ளி தலைமை ஆசிரியை  பாரதி, டாக்டர்  சண்முகசுந்தரம், விடியல்  பிரகாஷ், கவுன்சிலர்  அம்பிகா ராதாகிருஷ்ணன், நலவாரியம் செல்வராஜ் மற்றும் கராத்தே பயிற்சியாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்